பிரிந்து செல்லும் உறவுகள்
பெரும்பாலும் நம்மை
அவமானப்படுத்தி விட்டுத்தான் பிரிந்து செல்கிறது...!
பெரும்பாலும் நம்மை
அவமானப்படுத்தி விட்டுத்தான் பிரிந்து செல்கிறது...!
ஆனால் கார்டூனிஸ்ட் மதன் , விகடனிலிருந்து பிரிந்து போனது , ஒரு மலர் செடியிலிருந்து உதிர்ந்தது போல மிகவும் மென்மையாக நிகழ்ந்தது...
அந்த பிரிவு ஏற்படக் காரணம்...
“ஹாய் மதன்” பகுதியில் வாசகர் ஒருவர் கேட்ட இந்தக் கேள்வி...
“உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?”
அந்த பிரிவு ஏற்படக் காரணம்...
“ஹாய் மதன்” பகுதியில் வாசகர் ஒருவர் கேட்ட இந்தக் கேள்வி...
“உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?”
இதற்கு மதன் சாதாரணமாகவே பதில் எழுதி இருந்தார்...ஆனால் விகடன் ஆசிரியர் குழு , இந்தப் பதிலின் பக்கத்தில் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழும் படத்தை போட...
மதனுக்கு சிக்கல் ஆரமபமானது...
பதறிப் போன மதன் விகடனுக்கு எழுதினார் இப்படி...
மதனுக்கு சிக்கல் ஆரமபமானது...
பதறிப் போன மதன் விகடனுக்கு எழுதினார் இப்படி...
“2.5.2012 இதழில் ‘காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஜெயா டி.வி-யில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா?
ஜெயா டி.வி-யில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா?
…வரும் இதழிலேயே ‘புகைப்படங்கள், லே – அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
– மதன்”
– மதன்”
மதனின் இந்த வேண்டுகோளுக்கு , சற்றும் எதிர்பாராத பதிலை விகடன் வெளியிட்டது :
“மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடிகளுக்கும் , நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.
தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், ‘ஹாய் மதன்’ பகுதியை மட்டும் அல்ல… கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது..
எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி – பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
– ஆசிரியர்
தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், ‘ஹாய் மதன்’ பகுதியை மட்டும் அல்ல… கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது..
எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி – பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
– ஆசிரியர்
# அவ்வளவுதான்...முடிந்து போனது விகடன் – மதன் உறவுத் தொடர்கதை ...!
ஆனாலும் மதனுக்கும் , விகடனுக்கும் இத்தனை காலம் இருந்து வந்தது , உண்மையான உறவுதான் என்று உறுதியாகக் கூறலாம்...!
ஏனென்றால் இருவரும் இந்தப் பிரிவு நேரிட்ட பின்....
ஒருவரை ஒருவர் புறம் கூறவும் இல்லை..புழுதி வாரித் தூற்றவும் இல்லை...!
ஆனாலும் மதனுக்கும் , விகடனுக்கும் இத்தனை காலம் இருந்து வந்தது , உண்மையான உறவுதான் என்று உறுதியாகக் கூறலாம்...!
ஏனென்றால் இருவரும் இந்தப் பிரிவு நேரிட்ட பின்....
ஒருவரை ஒருவர் புறம் கூறவும் இல்லை..புழுதி வாரித் தூற்றவும் இல்லை...!
“ கருத்து மோதலில் உறவுகள் உடைந்த பின்னரும் ...
ஒருவர் மற்றவரைப் பற்றி அடுத்தவரிடம் புறம் பேசாமல் இருந்தால்
அதுவே உண்மையான உறவு...!!!”
[ ப.பி. ] John Durai Asir Chelliah
ஒருவர் மற்றவரைப் பற்றி அடுத்தவரிடம் புறம் பேசாமல் இருந்தால்
அதுவே உண்மையான உறவு...!!!”
[ ப.பி. ] John Durai Asir Chelliah
No comments:
Post a Comment