Monday, November 16, 2015

எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில்...அவர் வாசித்த அன்பு மகுடிக்கு , எத்தனையோ விஷப் பாம்புகள்

எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில்...அவர் வாசித்த அன்பு மகுடிக்கு , எத்தனையோ விஷப் பாம்புகள் கூட வசமாகி , 
அவர் வாசல் தேடி வந்து வந்து , வாழ்த்தி விட்டுப் போய் இருக்கின்றன...! 

இதில் பெரிதாக ஆச்சரியப்பட ஏதும் இல்லை..!
ஆனால்... எம்.ஜி.ஆர். என்ற மாமனிதரையே விழுங்க கூடிய அசுர பலம் கொண்ட அனகோண்டாவின் சக்தி கொண்டவர் கருணாநிதி..!

சற்றுமுன்.. கருணாநிதியின் ஒரு பழைய பேட்டியைப் படித்தபோது நான் அசந்து போனேன்...
இதோ..கருணாநிதியின் வார்த்தைகள் :

“நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார்.
என்னை அவரது அறைக்குத் தனிமையிலே அழைத்துச் சென்று , சட்டமன்றத்திற்குள் திறக்கப்படவிருந்த பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப் படத்திற்குக் கீழே என்ன வார்த்தைகளை எழுதலாம் என்பதைக் பற்றி என்னை எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார்.
நானும் மகிழ்ச்சியுடன், “உழைப்பே உயர்வு தரும்!” என்று எழுதிக் கொடுத்தேன்.
ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அப்போது நடந்துகொண்ட முறையை நினைக்கும் போது மகிழ்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்?” 


கருணாநிதியின் இந்த ஆனந்தத்தைக் காணும்போது , ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது...!

எம்.ஜி.ஆரின் அன்பு மகுடி , 
ஆனானப்பட்ட அனகோண்டா பாம்பைக் கூட 
அசத்தி இருக்கிறது...!


3 comments: