Monday, November 16, 2015

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்....!”

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்....!”
கண்ணதாசன் பாடல்களை எப்போதுமே விரும்பி ரசிக்கும் எனக்கு , அவர் “மகாதேவி” படத்தில் எழுதிய இந்த ஒரு வசனம் மட்டும் ...
கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு , நெருடலாகவே இருந்தது ...
“மகாதேவி” படத்தில் வில்லன் நடிகர் வீரப்பாவுக்காக ,
கண்ணதாசன் எழுதிய புகழ் பெற்ற வசனம் அது...
# கவிஞன் வாக்கு பொய்க்காது என்பார்கள்...
கண்ணதாசன் ஏன் அப்படி ஒரு எதிர்மறை வசனத்தை எழுதினார் என்று இன்றுவரை எனக்குப் புரியவில்லை...!!!
# அது இருக்கட்டும்...
சற்று முன் நான் படித்த ஒரு நண்பரின் பதிவு :
“மிதமிஞ்சிய நேர்மையாளனாக இருந்தால் ,
பஞ்சாயத்து உறுப்பினராகக் கூட முடியாது என்பதற்கு
அய்யா நல்லக்கண்ணு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.”
# ஆம்...நிஜம்தானே..!
இந்தப் பதிவை எழுதிய நண்பர் , அத்தோடு விடவில்லை...
கண்ணதாசனின் “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்....!”என்ற வரியையும் அத்தோடு சேர்த்தே பதிவு செய்திருக்கிறார்...
# என்ன செய்வது..?
நல்லகண்ணு போன்ற நல்ல தலைவர்கள் , நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்...
ஆனால் , நமக்குத்தான் அவர்களை ஏனோ பிடிப்பதில்லை...!!!
# அது தெரிந்துதான் கண்ணதாசன் இப்படி எழுதினாரோ , என்னவோ..?

John Durai Asir Chelliah

No comments:

Post a Comment