“ ரஜினி, கமலிடம் நீங்கள் கண்டு வியந்த விஷயங்கள் , பல இருக்கும்..ஆனால் அவர்களின் குருவான உங்களுக்கு , அவர்களிடம் பிடிக்காத விஷயம் என்ன?”
# இது இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் ஒரு முறை கேட்கப்பட்ட கேள்வி...
இதற்கு பாலச்சந்தர் என்ன பதில் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம்...
அதற்கான முழு உரிமையும் , தகுதியும் அவருக்கு இருக்கிறது...
ஆனால்...பாலச்சந்தர் சொன்ன பதில் என்ன தெரியுமா..?
" நூற்றுக்கு நூறு'' படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார். ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். லட்சுமி கறுப்புப் புள்ளி என்பார். நாகேஷ், ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா என்பார். எங்கேயோ படித்திருந்தேன்.
அதை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தேன்.
அப்படித்தான். மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.
அதைத்தான் நான் பார்க்கிறேன்.”
# பாலச்சந்தரின் உள்ளத்தின் உயர்வு , இந்த உன்னத வார்த்தைகளில் வெளிப்படுகிறது...!
“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.”
# உலகத்தில் மிகவும் எளிமையானது ...
மற்றவர்களின் குறைகளைக் காண்பது …
உலகிலேயே மிக மிகக் கடினமானது ...
தன் குறையை , தானே அறிவது...!!
# இது இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் ஒரு முறை கேட்கப்பட்ட கேள்வி...
இதற்கு பாலச்சந்தர் என்ன பதில் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம்...
அதற்கான முழு உரிமையும் , தகுதியும் அவருக்கு இருக்கிறது...
ஆனால்...பாலச்சந்தர் சொன்ன பதில் என்ன தெரியுமா..?
" நூற்றுக்கு நூறு'' படம் பார்த்திருப்பீர்கள். அதில் எல்லோருமே ஜெய்சங்கரை பெண் சபலம் உள்ளவராக பழி சொல்லுவார்கள். அவரைக் காதலிக்கும் லட்சுமியும் அதை நம்ப ஆரம்பித்துவிடுவார். ஒரு காட்சியில் நாகேஷ் வெள்ளைத்தாளில் பேனாவால் ஒரு புள்ளி வைத்துவிட்டு இது என்ன என்று கேட்பார். லட்சுமி கறுப்புப் புள்ளி என்பார். நாகேஷ், ஏன் இவ்வளவு வெள்ளை இருக்கிறதே இது கண்ணுக்குத் தெரியவில்லையா என்பார். எங்கேயோ படித்திருந்தேன்.
அதை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தேன்.
அப்படித்தான். மனிதன் என்றால் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. ரஜினி, கமலிடம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.
அதைத்தான் நான் பார்க்கிறேன்.”
# பாலச்சந்தரின் உள்ளத்தின் உயர்வு , இந்த உன்னத வார்த்தைகளில் வெளிப்படுகிறது...!
“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.”
# உலகத்தில் மிகவும் எளிமையானது ...
மற்றவர்களின் குறைகளைக் காண்பது …
உலகிலேயே மிக மிகக் கடினமானது ...
தன் குறையை , தானே அறிவது...!!
No comments:
Post a Comment