Sunday, October 11, 2015

எல்லாரையும் நம்புங்கள் .. துரோகம் பழகி விடும்...!



“எல்லாரையும் நம்புங்கள் .. துரோகம் பழகி விடும்...!
எவரையுமே கண்டு கொள்ளாதீர்கள் ... தன்னம்பிக்கை தன்னால் வரும்..”

# தன்னம்பிக்கை ஊட்டும் இந்த வரிகள் , இன்று என் கண்ணில் பட்ட அதே வேளையில் ,
கே.பாக்யராஜின் தன்னம்பிக்கையை காட்டும் தகவல் ஒன்றும் , “ஒரு கைதியின் டைரி” யாக என் முன்னே வந்து விழுந்தது...

‘ஒரு கைதியின் டைரி’.....இது கமல் நடித்து , பாரதிராஜா இயக்கிய மாபெரும் வெற்றிப் படம்...
கதை கே.பாக்யராஜ் எழுதியது...

இந்தப் படத்தை இந்தியில் “ஆக்ரி ரஸ்தா” என்ற பெயரில் அமிதாப் நடிக்க , பாக்யராஜே இயக்கினார்...

க்ளைமாக்ஸ் காட்சி...பாக்யராஜ் , அமிதாப்பிடமும் , தயாரிப்பாளரிடமும் காட்சியை எடுத்துச் சொல்ல ... அவர்கள் இருவருமே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்..
ஏனென்றால் ‘ ஒரு கைதியின் டைரி ’ யில் , கமல் வீரசிவாஜி சிலை வேடத்தில் வந்து வில்லனைக் கொல்லுவார்...ஆனால் அது பாக்யராஜ் எழுதிய ஒரிஜினல் க்ளைமாக்ஸ் இல்லை... பாதாள சாக்கடை சண்டைதான் பாக்யராஜ் எழுதிய ஒரிஜினல் க்ளைமாக்ஸ்...
‘ ஒரு கைதியின் டைரி ’ க்ளைமாக்ஸ் நேரத்தில் , கமலுக்கும் பாரதிராஜாவுக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு வர... பாக்யராஜ் எழுதியிருந்த க்ளைமாக்ஸை மாற்றி , படத்தை முடித்து விட்டாராம் பாரதிராஜா... ஆனாலும் ... படம் சூப்பர் ஹிட்...

இப்போது ஹிந்தியில் தானே இயக்கும் வாய்ப்பு வந்தபோது , தன் சொந்த க்ளைமாக்ஸ்சை படம் பிடிக்க ஆசைப்பட்டார் பாக்யராஜ்...
ஆனால் அமிதாப் ஆழ்ந்து யோசித்து விட்டு...“ தமிழில் வந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற அந்த சிவாஜி சிலை க்ளைமாக்ஸை ,தேவை இல்லாமல் ஏன் மாற்ற வேண்டும்” என கேட்க... பதட்டமானார் பாக்யராஜ்...

“அதை விட இது நல்லா வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு ஸார்..” என்று பாக்யராஜ் தன்னம்பிக்கையுடன் சொல்ல ...
தயாரிப்பாளர் எதுவும் பேசாமல் பாக்யராஜ் கேட்ட பாதாள சாக்கடை செட்டை பத்து லட்சம் ரூபாய் செலவில் போட்டு விட்டார்...அதன் பின் பாக்யராஜிடம் வந்த தயாரிப்பாளர் , “ இங்கே பாருங்க பாக்யராஜ் சார்...செலவை குறைப்பதற்காக நான் செட்டை போடாமல் இருக்கிறேன் என்று நீங்கள் நினைத்து விடக் கூடாது..அதனாலதான் இந்த செட்டை போட்டிருக்கிறேன்...ஆனால்...இப்பவும் சொல்கிறேன்... தமிழில் வந்த க்ளைமாக்ஸ் சூப்பர்... அதை மாற்ற வேண்டாம்.. அப்படியே எடுத்து விடுங்கள்” என்றார்....

தரமசங்கடமான பாக்யராஜ்..”ஒண்ணு பண்றேன்...நீங்க போட்ட செட்டில் என்னோட க்ளைமாக்சை எடுத்துக்கிறேன்..அப்புறம் நீங்களும் அமிதாப்பும் சொல்றமாதிரி தமிழ் பட க்ளைமாக்ஸ்சும் தனியா எடுத்துக்கறேன்.. எது நல்லா இருக்குதோ , அதை வச்சுக்குவோம்..”என்றார்..

பாக்யராஜின் இந்த தன்னம்பிக்கை அமிதாப்பையே கொஞ்சம் அசர வைத்தது... அந்த நம்பிக்கையில் பாக்யராஜ் சொன்னபடி பாதாள சாக்கடையில் குதித்து விட்டார் அமிதாப்...

க்ளைமாக்ஸ்சை தான் நினைத்தபடி எடுத்து முடித்தார் பாக்யராஜ்... அனைவரும் அசந்து போனார்கள் ..அமிதாப் உட்பட...
அப்புறம் என்ன..?

“ ஆக்ரி ரஸ்தா” தமிழை விட ஹிந்தியில் பிரமாதமாக ஓடியதாம்...
அந்த வெற்றிக்கு காரணம் ...சந்தேகமில்லாமல் பாக்யராஜின் தன்னம்பிக்கைதான் ...!

ஆம்... தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு ,
எல்லா வாசல் கதவுகளும் திறந்து வரவேற்பு அளிக்கும்...
[ப.பி]
கடவுள் ஒரு கதவை மூடி விட்டால் , மறு கதவை திறப்பார் என்று காத்திருப்பது ..நம்பிக்கை..!
மூடிய கதவை உடைக்க கையில் சுத்தியலை எடுத்து விட்டால் ... அதுதான் தன்னம்பிக்கை..!!

No comments:

Post a Comment