Thursday, October 22, 2015

“எல்லோருக்கும் பதினைந்து நிமிஷப் புகழ் தேவையாக இருக்கிறது.”..


“எல்லோருக்கும் பதினைந்து நிமிஷப் புகழ் தேவையாக இருக்கிறது.”...

சுஜாதா பல ஆண்டுகளுக்கு முன் இப்படி எழுதி இருக்கிறார் :

"இப்போது புதிதாக BLOGS என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயசில் நாங்கள் எல்லோரும் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையின் மறுவடிவம்தான். 

'இதோ பார் என் கவிதை', 'இதோ பார் என் கருத்து', 'இதோ பார் உலகுக்கு என் உபதேசம்' என நானும் இருக்கிறேன் நண்டுவளையில் என்று, ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக் குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்களா என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது!”

# சுஜாதா சொல்வது சரிதான் என்று தோன்றுகிறது... நம் எல்லோருக்குமே அந்த “பதினைந்து நிமிஷ புகழ் ”....
ஏதோ ஒரு பரவசம் கொடுக்கத்தான் செய்கிறது..!

நமக்கு மட்டும் அல்ல... நடிகை சுகன்யாவுக்கும் கூட அந்த “பதினைந்து நிமிஷ புகழ் ” பரவசம் தேவைப்பட்டிருக்கிறது...!
இந்தியன் படத்தின்போது அது அறிந்தோ அறியாமலோ அவரிடம் வெளிப்பட்டிருக்கிறது...
அது பற்றி சுஜாதா :

“இந்தியன் படம் வெளிவரும் முன் சென்சார் அதிகாரியாக இருந்த ஞானராஜசேகரன் என்னை அலுவலகத்துக்கு அழைத்தார். “நடிகை சுகன்யா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அவரை ‘டூப்’ வைத்து துகிலுரித்த மாதிரி காண்பித்ததாக யாரோ சொல்லியிருக்கிறார்கள். அந்தக் காட்சியை அனுமதிக்கக் கூடாது” என்று எழுதியிருப்பதாகச் சொன்னார்.
“அப்படி ஒரு காட்சியே இல்லையே... இல்லாத காட்சியை எப்படி வெட்டப் போகிறீர்கள் ?” என்று கேட்டேன். சுகன்யாவை இந்தியனில் கொஞ்சம்போலும் இளமையாகக் காட்டிவிட்டு பெரும்பாலும் கிழ கமல்ஹாசனுக்கு மாட்சிங்காக சுருக்கங்கள் விழுந்து காட்டியதில் அவருக்கு மிகுந்த அதிருப்தி இருந்தது. தெரியாத்தனமாய் ஷங்கர் படம் என்பதால் ஒப்புக்கொண்டுவிட்டார். ஷங்கரின் படத்துக்கு மறுப்புத் தெரிவித்தால் நிச்சயம் கவனிப்பார்கள்.
எல்லோருக்கும் பதினைந்து நிமிஷப் புகழ் தேவையாக இருக்கிறது.”

# உண்மை... சுஜாதா சொல்வதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்...
என்ன... சிலருக்கு பதினைந்து நிமிஷப் புகழ்....சிலருக்கு 30 நிமிஷம் ...சிலருக்கு ஒருமணி நேரம்...சிலருக்கு ஒரு சில நாட்கள்...
இதில் வேண்டுமானால் சிலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம்...!

# சரி...நீங்கள் எழுதிய கருத்துக்களில் , சில நாட்களுக்குப் பின் உங்களுக்கே கருத்து வேறுபாடு உண்டானால் ....???கவலைப்படாதீர்கள்..!

அதையும் சுஜாதா அனுபவித்துச் சொல்லி இருக்கிறார் ..இப்படி..!

“முன்னர் எழுதியதில் நமக்குக் கருத்து வேறுபாடு வந்தால், நாம் அனுபவம் பெற்று இருக்கிறோம் என்று அர்த்தம்...”

John Durai Asir Chelliah

No comments:

Post a Comment