Friday, October 23, 2015

நமது ஆழ்மனம் எதை நோக்கி அதிகம் சிந்திக்கிறதோ , அது நடந்தே தீரும் ...! ஆம்... அத்தனை ஆற்றல் கொண்டது நமது ஆழ்மனம் ....!


நமது ஆழ்மனம் எதை நோக்கி அதிகம் சிந்திக்கிறதோ , அது நடந்தே தீரும் ...!
ஆம்... அத்தனை ஆற்றல் கொண்டது நமது ஆழ்மனம் ....!

யாரோ சொன்னது... எங்கோ கேட்டது... எப்போதோ படித்தது.....
நமது இதயத்தின் அடித்தளத்தில் சென்று , ஆழ்மனதில் அப்படியே தங்கி விடுகிறது.....

தங்கி விட்ட அந்த விஷயம் , பிறகு எப்போதோ நாம் எதிர்பார்க்காத வேளையில் ,எங்கிருந்தோ புறப்பட்டு வந்து , நமது பேச்சுக்களாகவும் எழுத்துக்களாகவும் மீண்டும் பிறப்பெடுக்கிறது...

“பாட்ஷா” படத்தின் பவர்புல் வசனம் .. “ நான் ஒரு தடவ சொன்னா ... நூறு தடவ சொன்ன மாதிரி..”
இதை எழுதியவர் பாலகுமாரன்....ஆனால் 18ம் நூற்றாண்டிலேயே இதைப் போல ஒரு வசனம் எழுதப்பட்டு விட்டதாம்...

“ Sense and Sensibility ”.... “Pride and Prejudice” ....இதைப் போன்ற புகழ்மிக்க நாவல்களை எழுதிய ஆங்கிலப் பெண் நாவலாசிரியர் “ஜேன் ஆஸ்டின்” [Jane Austen ]...
இவர் 1815 ஆம் ஆண்டு எழுதி , வெளியிட்ட புகழ் பெற்ற நாவல் “எம்மா” ....இந்த நாவலில் இடம்பெற்ற வாசகம் ... “If I've told you once, I've told you a 100 times..."

இதை எப்போதோ பாலகுமாரன் படித்திருக்கலாம்...அது அவரது ஆழ்மனதில் தங்கி ...“பாட்ஷா” படத்திற்கு வசனம் எழுதும்போது வெளிப்பட்டிருக்கலாம்...
ஆனாலும் அந்த வார்த்தைகளுக்கு அத்தனை அழுத்தமான வலிமை கொடுத்தவர் .... ரஜினி....!

இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும்...!
“பாட்ஷா “வின் மூலம் ரஜினி எவ்வளவு அழுத்தமாக நம் ஆழ்மனதில் புகுந்தாரோ , அதே அளவு நம் ஆழ்மனதில் புகுந்து , இன்னும் நம் நினைவில் நிற்பவர் ரகுவரன்...

நான் ரசித்த நண்பரின் பதிவு...

# “கபாலி” மூலம் ரசிகர்களுக்கு இன்னொரு பாட்ஷா கிடைக்கலாம்...
ஆனால் இன்னொரு ஆண்டனி கிடைப்பாரா என்பது சந்தேகம்தான்..”

# உண்மைதான்...!!!

John Durai Asir Chelliah

No comments:

Post a Comment