Thursday, October 22, 2015

அத்தனைக்கும் ஆசைப்படு” என்பது , அர்த்தம் உள்ள தத்துவம்தான்..!


அத்தனைக்கும் ஆசைப்படு” என்பது , அர்த்தம் உள்ள தத்துவம்தான்..!
ஆனால் ..அதை விட முக்கியமானது ...

“அவமானப்பட ஆசைப்படுங்கள்..”

ஆம்.... அவமானங்களை வெறுக்காதீர்கள்...!

“நெருங்கியவர்கள் ஏற்படுத்தும் அவமானங்கள்தான் , வாழ்ந்துகாட்டவேண்டும் என்ற வலிமையை நமக்குள் வளர்க்கின்றன..” - இது அன்பு நண்பர் ஒருவர் சொன்னது..அதில் அர்த்தம் உள்ளது..!

மாஸ்டர் சேகர்...மாஸ்டர் ஸ்ரீதர்... மாஸ்டர் பிரபாகர்.....
இவர்கள் எல்லோருமே அன்றைய ரசிகர்களின் மனம் கவர்ந்த குழந்தை நட்சத்திரங்கள்...
இந்த நட்சத்திரங்கள் எல்லோருமே வாலிபனாக வளரும்போதே , எம்.ஜி.ஆர். ஆக வேண்டும் , சிவாஜி ஆக வேண்டும் என எண்ணற்ற கனவுகளோடு... எல்லையில்லா ஆசைகளையும் தன்னோடு சேர்த்தே வளர்த்தார்கள்....

ஆனால் ஒரே ஒரு குழந்தை நட்சத்திர சிறுவன் மட்டும் வித்தியாசமான அனுபவங்களோடு , விதம் விதமான அவமானங்களையும் சந்தித்தான்..
நடனம் படித்தான்...நாட்டிய நிகழ்சிகள் நடத்தினான்...
எல்லாமாகச் சேர்ந்து ஏழாயிரம் ரூபாய் நஷ்டம்...

சினிமா உலகத்தை விட்டு போகப் போகிறேன் என்று சொன்னவனை , அவன் அருகில் இருந்தவர்கள் அணைத்து , ஆதரவு கொடுத்தார்கள்....
சின்ன சின்ன வாய்ப்புகளும் , பெரிய பெரிய அவமானங்களும் நிறையவே கிடைத்தன...

டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன் கொடுத்த ஆதரவால்..நடன உதவி இயக்குனர் வாய்ப்பு கிடைக்க .... ‘அன்னை வேளாங்கண்ணி’ (1971) படத்தின் டைட்டிலில் உதவி இயக்குனர் என , திரை உலகின் ஒரு ஓரத்தில் ஒண்டிக் கொள்ள , கொஞ்சம் இடம் கிடைத்தது....

1972 இல் வந்த “குறத்தி மகன்” படத்தில் ஒரு ஓரமாக நின்று கொண்டு... அந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மாஸ்டர் ஸ்ரீதரைப் பார்த்து "ராஜா வாழ்க" என்று கோஷம் போடும் கேரக்டர்...

ஜெமினி கணேசன் டைரக்டர் ஸ்ரீதரிடம் கூட்டிக்கொண்டு போக... அந்தப் பையனைப் பார்த்துவிட்டு ஸ்ரீதர் சொன்ன கமெண்ட் .. “ இந்தப் பையனுக்கு ஃபோட்டோஜெனிக் ஃபேஸ் கிடையாது ..”

விடவில்லை ஜெமினி... “இவன் துடிப்பான பிள்ளை. உங்க படத்திலே நடிச்சா நல்லா ‘ஷேப்’ ஆயிருவான்,” என்று டைரக்டர் பாலசந்தரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
அரங்கேற்றம் (1973) படத்தில் நிறைய காட்சிகளில் நடித்த அந்த இளைஞனுக்கு அதற்காக கிடைத்தது 300 ரூபாய் மட்டுமே ....!

அரங்கேற்றத்தை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டான்...திறமையை வளர்த்துக் கொண்டான்...திரை உலக விஷயங்களை கரைத்துக் குடித்தான்....பெரிய நடிகன் ஆனா...ர்....!

ஆம்... விஸ்வரூபம் எடுத்த அந்த குழந்தை நட்சத்திரம் ..... கமல்...!

இந்த இடத்தை அடைவதற்குள் கமல் பட்ட அவமானங்கள்.....

அன்று சினிமாவை விட்டு போகப் போகிறேன் என்று நடுக்கத்துடன் சொன்ன அந்த நடிகர் , இப்போது மிரட்டலாகச் சொன்னார்.... “கலைஞன் என்ற முறையில் மீண்டும் எனக்கு மிரட்டல், பிரச்னை ஏற்பட்டால், நாட்டை விட்டு வெளியேறுவேன்..”

# அன்பான அறிவுரைகளை விட அவமானங்கள்தான் , வெற்றியை நோக்கி விரைவாக நம்மை இழுத்துச் செல்லும்....

ஆதலினால்...... அவமானப்பட ஆசைப்படுங்கள்...!

“உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல... தப்பித்தவறிக் கூட அதே தவறை நாம் இன்னொருவருக்கு செய்து விடக்கூடாது.”
[ ப.பி.]
John Durai Asir Chelliah

No comments:

Post a Comment