Thursday, October 22, 2015

“ஆங்கிலயேன் ஒருவன் தமிழை , தட்டுத் தடுமாறிப் பேசினால் அதை ரசிக்கிறார்கள்...

“ஆங்கிலயேன் ஒருவன் தமிழை , தட்டுத் தடுமாறிப் பேசினால் அதை ரசிக்கிறார்கள்...
ஆனால் தமிழன் ஒருவன் ஆங்கிலத்தை அரைகுறையாய் பேசினால் , கேலியாய் சிரிக்கிறார்கள்...”
[ப.பி.]

# இந்த நேரத்தில் சின்னப்ப தேவர் ஞாபகம் வருகிறது ... அவரின் “பட்லர்” இங்கிலிஷ் பட உலகில் ரொம்ப பிரபலம்...!

“ஈஸியா இங்கிலீஷ் பேசணும் முருகா....என்ன வழி..?” என்று ஆங்கிலம் தெரிந்த நண்பர்களிடம் ஆலோசனை கேட்டாராம் தேவர்...
அதற்கு அவருக்கு கிடைத்த அட்வைஸ் :
“மத்தவங்க தமிழில் பேசினாலும் , நீங்க பதிலுக்கு இங்கிலிஷிலேயே பேசுங்க... ஈஸியா பழகிடலாம்...”

ஒருநாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகை சரோஜாதேவி , தேவர் அருகில் வந்து , தயங்கி தயங்கி நின்றாராம்..
“என்னம்மா..?” என்று கேட்ட தேவரிடம் “அண்ணே! நாளைக்கு எனக்கு கொஞ்சம் வீட்டு வேலைகள் இருக்கு... ஷூட்டிங் வர முடியாது... நான் இல்லாம அட்ஜஸ்ட் பண்ணி எடுத்துக்கறீங்களா..?”

தமிழில் பதில் சொல்ல வாய் திறந்த தேவருக்கு , நண்பர்கள் சொன்னது நினைவுக்கு வந்ததாம்....
ஸ்டைலாக தேவர் , சரோஜாதேவியைப் பார்த்து சொன்னாராம் ...இப்படி...

“ஓகே ஓகே... டுமாரோ ஐ வில் மேரேஜ் யூ...”

அதிர்ந்து போனாராம் சரோஜாதேவி ... “அண்ணே...” என்று அவர் அலற...அருகிலிருந்தவர்கள் எடுத்துச் சொன்ன பின்தான் , சமாதானமாகிப் போனாராம் சரோஜாதேவி...

“மேனேஜ்” செய்து கொள்கிறேன் என்பதைத்தான் “மேரேஜ்” செய்து கொள்வதாக சொல்லி , எல்லோரையும் அதிர வைத்து விட்டார் தேவர்...

# ஓகே..ஓகே...!
இங்கிலிஷில் பேச எல்லோருக்கும் ஆசை இருப்பது தப்பில்லை..!

ஆனால்...

“ஆங்கிலம் பேசும்போது
அதில் தமிழ் கலந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் நாம்...
தமிழ் பேசும்போது ஏன் அதே கவனத்தை மனதில் கொள்வதில்லை.?”

# [ சிந்திக்க வைத்த பதிவு..! ]

John Durai Asir Chelliah

No comments:

Post a Comment