Sunday, October 18, 2015

ஒவ்வொரு சவாலையும் , சந்தர்ப்பம் என எண்ணிக் கொண்டால்..சாத்தியமாகாத வெற்றிகள் , சத்தியமாய் இந்த உலகத்தில் இல்லை...!


ஒவ்வொரு சவாலையும் ,
சந்தர்ப்பம் என எண்ணிக் கொண்டால்..சாத்தியமாகாத வெற்றிகள் , சத்தியமாய் இந்த உலகத்தில் இல்லை...!

இந்தப் படத்தில் உள்ளவர் பெயர் ஐசனோவர் ..இவர்தான் அமெரிக்காவின் முப்பத்தி நான்காவது அதிபராக 1953 ஆம் ஆண்டு முதல் 1961ஆம் ஆண்டு வரை இருந்தாராம்...
இவரால் ஒரு சூப்பர் ஹிட் தமிழ்ப் பாடல் , ஸ்ரீதர் காலத்திலேயே உருவாகி இருக்கிறது...

“காதலிக்க நேரமில்லை” – இந்தப் படத்தின் பாடல் கம்போசிங் செய்வதற்காக இயக்குனர் ஸ்ரீதரின் அலுவலகத்தில் கண்ணதாசன் , எம்.எஸ்.வி. ..இருவரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்க....
பக்கத்தில் உள்ள அறைக்குள் ஸ்ரீதர் தன் குழுவினருடன் கதை விவாதத்தில் [ டிஸ்கஷன் ] இருந்தாராம்...

அப்போது எம்.எஸ்.வி.யின் பக்கத்தில் இருந்த ஒருவர் , செய்தித்தாளில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஐசனோவர் பற்றி படிக்க , ஊர் உலகம் தெரியாத வெள்ளந்தி விஸ்வநாதன் , கண்ணதாசனிடம் “ யாரண்ணே அந்த ஐசனோவர் ..?” என்று கேட்க , கண்ணதாசன் சிரித்துக் கொண்டே .. “அடே மண்டு... அவர் அமெரிக்க நாட்டு ஜனாதிபதியாக இருந்தவர்..உனக்கு தெரியாதா..?” எனக் கேட்க...

விஸ்வநாதனுக்கு ஏனோ..அந்த ஐசனோவர் என்ற பெயர் பிடித்துப் போக...திடீர் என உரத்த குரலில்... “ஐசனோவர்…. ஆவலோவா…” என்று வாய்க்கு வந்த வார்த்தைகளை ராகத்தோடு கத்த....
சட் என டிஸ்கஷன் நடந்த அறையிலிருந்து எட்டிப்பார்த்த ஸ்ரீதர் ....” அதுதான்..அதேதான்.... விஸ்வநாதன் அண்ணே ...இப்போ நீங்க கத்தினீங்களே அதுதான் ட்யூன்” என்று சொல்லி விட்டு மீண்டும் அறையினுள் நுழைந்து விட்டார்....

கண்ணதாசனுக்கும் , எம்.எஸ்.விக்கும் எதுவும் புரியவில்லை..புலப்படவில்லை...
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த எம்.எஸ்.வி. வேறு ஒரு பாடல் ஒலிப்பதிவு காத்திருக்கிறது என்று அங்கிருந்து புறப்பட முயற்சிக்க...
“ “இங்கே பாருடா விசு.... இப்போ என் கையிலே செலவுக்கே காசில்லை... ஸ்ரீதருக்கு இன்னைக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதினா , கணிசமா ஒரு தொகை கொடுப்பாரு. இந்த நேரத்தில என்னை விட்டுட்டு அங்கே இங்கேன்னு போய்டாதே விச்சு... டேய்... எனக்கு வேலை கொடுடா விஸ்வநாதா….!” என்று தன்னை அறியாமல் உரத்த குரலில் சொல்ல...
டிஸ்கஷன் அறைக் கதவு மீண்டும் திறந்தது.... தலையை மட்டும் வெளியே நீட்டிய ஸ்ரீதர் ...

“கவிஞரே, இப்போ சொன்னீங்களே .... அதுதான் பல்லவி..ஆரம்பியுங்க..” என்று சொல்லி விட்டு மீண்டும் அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டார் ஸ்ரீதர்....
இப்போது கண்ணதாசனுக்கும் , விஸ்வநாதனுக்கும் அதிர்ச்சி....
விஸ்வநாதன் கேட்டார் ...“ஏண்ணே, நம்ம ஸ்ரீதருக்கு இன்னைக்கு என்ன ஆச்சு….? நான் வாய்க்கு வந்தபடி கத்தினதை ட்யூனா செலக்ட் பண்ணிட்டார்.... “வேலை கொடுடா விஸ்வநாதா” ன்னு நீங்க கேட்டதை பல்லவியா செலக்ட் பண்ணிட்டார்... என்னண்ணே நடக்குது இங்கே..?”

கண்ணதாசன் சொன்னார்... “ஓகே விச்சு...இது காலம் நமக்கு கொடுக்கற ஒரு சந்தர்ப்பம்.... இதில வெற்றியை சாத்தியமாக்கிக் காட்டணும்...நாம ஆரம்பிக்கலாம்...நீ கத்தியதுதான் ட்யூன்... நான் சொன்னதுதான் பல்லவி... ஆரம்பிப்போம்.”
என்று சொல்லி ,சரசரவென வரிகளை சரம் சரமாய் அடுக்க , அதற்கு எம்.எஸ்.வி. ரகம் ரகமாய் ராகமாலை தொடுக்க ...அப்படி உருவானதுதான்...
“மாடி மேல மாடி கட்டி கோடிகோடி சேர்த்து விட்ட சீமானே...
விஸ்வநாதன்.... வேலை வேண்டும்"

# ஒவ்வொரு சவாலையும் ...சந்தர்ப்பம் என எண்ணிக் கொண்டால்....
சாத்தியமாகாத வெற்றிகள் , சத்தியமாய் இந்த உலகத்தில் இல்லை...!

# அக்டோபர் 17....
கவியரசர் கண்ணதாசனின் நினைவு நாள்...!

No comments:

Post a Comment